பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று (15) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.