தென் கொரியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
அங்கு மூன்றாவது நாளாக பலத்த மழை பெய்து வருகின்றதுடன், வடக்கு சாங்சியோன் மாகாணத்தில் நிலச்சரிவு மற்றும் அணைக்கட்டு நிரம்பி வழிவதால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய நிலவரப்படி 1,567 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பல ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.