நிட்டம்புவ – கலபிடமட பிரதான வீதியில் துனுமலை விகாரைக்கு அருகில் கெப் வண்டியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
துனுமலையைச் சேர்ந்த சரத் வேரகொட என்ற நபரே இன்று (14) காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
41 வயதாக அவர், ரப்பர் தோட்டமொன்றில் காவலாளியாக பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.