Monday, June 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் பெர்னாண்டோவின் மனுவை முடிவுறுத்துமாறு கோரிக்கை

ஜெரொம் பெர்னாண்டோவின் மனுவை முடிவுறுத்துமாறு கோரிக்கை

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, போதகர் ஜெரொம் பெர்னாண்டோ மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான, நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபரும், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்டுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles