ஐஸ் போதைப்பொருளுடன் இராணுவ பொலிஸ் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர் பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படையைச் சேர்ந்த (31) வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று (13) பிற்பகல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.