Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

பேருந்து சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

பூனேவ வீதித் தடுப்பில் நேற்று (11) நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​பேருந்தில் பயணித்த பயணி ஒருவரிடம் 4 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், வெறொரு பேருந்து சோதனையின் போது, ​​4 கிலோ கேரள கஞ்சாவுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விஸ்வமடு மற்றும் ஹினிதும பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 36 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்கள் நேற்று (11) மதவாச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles