Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்தக்காளியை பாதுகாக்க மெய்க்காப்பாளர்களை அமர்த்திய வியாபாரி

தக்காளியை பாதுகாக்க மெய்க்காப்பாளர்களை அமர்த்திய வியாபாரி

இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய ஒரு தனித்துவமான வழியை பின்பற்றியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான வாரணாசியில் தனது கடையில் உள்ள தக்காளிகளுக்கு பாதுகாப்புக்காக இரண்டு மெய்க்காப்பாளர்களை வியாபாரி ஒருவர் வேலைக்கு வைத்துள்ளார்.

வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள மளிகைக் கடை உரிமையாளரும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தொண்டருமான அஜய் ஃபௌஜி, தனது கடையில் தக்காளிகளை ‘பாதுகாக்க’ இரண்டு தொழில்முறை மெய்க்காப்பாளர்களை (Bodyguards) நியமித்துள்ளார்.

தக்காளி விலையில் பேரம் பேசும் போது வாங்குபவர்கள் ஆக்ரோஷமாக வருவதைத் தடுக்க வே இவ்வாறு செய்ததாக ஃபௌஜி கூறுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles