Monday, July 28, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்து: ஒரு வயது குழந்தை மரணம்

முச்சக்கர வண்டி விபத்து: ஒரு வயது குழந்தை மரணம்

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் சர்வோதய வீதி சந்திக்கு அருகில் நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும் அவரது குழந்தையும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles