Monday, July 28, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுவரெலியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

நுவரெலியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

நுவரெலியாவில் இன்று(8) காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா – பம்பரகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

நுவரெலியா நகரில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இக் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்திய வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles