நைஜீரிய பிரஜை ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை இன்று (06) வழங்கினார்.
245 கிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
