இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக, மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
