கிராண்ட்பாஸ் – நாகலம்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் நேற்று (05) கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வடுல்லாவத்தை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.