Saturday, August 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் அதிபர்களுக்கு

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் அதிபர்களுக்கு

தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

குரல்பதிவு ஒன்றை அனுப்பியுள்ள அவர், சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், நுவரெலிய கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளுக்கு இந்நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்த முடியாத நிலைமை இருந்தால், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? ஏன்பதை தீர்மானிக்க முடியும்.

இதுதொடர்பாக அவர்கள் கோட்ட கல்வி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles