உள்நாட்டு கடனை மேம்படுத்தும் திட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக பொது நிதி தொடர்பான குழு இன்று (30) கூடுகிறது.
பொது நிதி தொடர்பான குழு நேற்று (29) கூடியபோது இது தொடர்பில் பல தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
உள்ளூர் கடன் மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.