நாட்டில் சுமார் 18,600 அரச வைத்தியர்கள் இருந்த போதிலும் அவர்களில் 1500-1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், 103 இருதயநோய் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றாலும் 57 பேர் வரியே இருப்பதாகவும், அவர்களில் 8 பேர் டிசம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வைத்தியர்களுக்கான பற்றாக்குறையால் நாட்டில் 50க்கும் மேற்பட்ட புற மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.