Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் பொது நிதிக்குழுவிற்கு அழைப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் பொது நிதிக்குழுவிற்கு அழைப்பு

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த அரசாங்கத்தின் யோசனை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி அதிகாரிகள், சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோர் பாராளுமன்ற பொது நிதிக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொது நிதிக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சகல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி, நாணயச் சபை, கணக்காய்வாளர் நாயகம், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் விடயங்கள் ஆராயப்பட்டதன் பின்னர், சகல வங்கிகளின் பிரதானிகளுடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுடன் நாளைய தினம் மீண்டும் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles