பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரரின் 19 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறிதம்ம தேரரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க அனுமதி வழங்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.