சமுர்த்தி வங்கிகளும் இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை திட்டமிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் இடையில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.