கண்டி நகரை உள்ளடக்கிய வகையில் நாளை (30) காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
12 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இது அமுல்படுத்தப்படவுள்ளது.