Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொரளை சரணபால தேரர் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 4 கிலோ 4 கிராம் ஐஸ் போதைப்பொருள், 195 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் முக்கிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles