Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎஹலியகொடைவில் கோர விபத்து: 20 பேர் காயம், ஐவர் கவலைக்கிடம்

எஹலியகொடைவில் கோர விபத்து: 20 பேர் காயம், ஐவர் கவலைக்கிடம்

எஹலியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸெல்ல பயிற்சி நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (26) காலை 10.00 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று வீதியில் தரிக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன், சொகுசு பேருந்து முன்னோக்கிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles