Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்வெடித்து சிதறிய டைட்டன் - ஐந்து பயணிகளும் உயிரிழப்பு

வெடித்து சிதறிய டைட்டன் – ஐந்து பயணிகளும் உயிரிழப்பு

காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பயணிகளும் உயிரிழந்து விட்டதாக நம்பப்படுவதாக கப்பலின் நிறுவனமான OceanGate தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.

எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத், ஹமிஷ் ஹார்டிங் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரை துரதிர்ஷ்டவசமாக இழந்துவிட்டதாக நாங்கள் இப்போது நம்புகிறோம்.

இவர்கள் உண்மையான ஆய்வாளர்கள், அவர்கள் தனித்துவமான சாகச உணர்வைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் உலகின் பெருங்கடல்களை ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர்கள்.

இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயங்கள் இந்த ஐந்து ஆன்மாக்களுடனும் அவர்களது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் உள்ளன.

அவர்கள் அறிந்த அனைவருக்கும் அவர்கள் அளித்த உயிர் இழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலான டைட்டனின் உடையது என நம்பப்படும் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்திருந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு ‘பேரழிவு வெடிப்பு’ இடம்பெற்றதை உறுதிச்செய்வதாக அமெரிக்க கரையோர காவல்படையின் அதிகாரி ஒருவர் செய்தி மாநாடு ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles