Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேரின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

குமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேரின் மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

முன்னிலை சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் உள்ளிட்ட 40 பேர் தாக்கல் செய்த, மூன்று அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டித்து, கொழும்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட தங்களைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம் தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறுகோரி, அவர்கள் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக்க டி சில்வா ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.

இதன்போது, குறித்த மனுக்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles