கண்டியில் பெண் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா பணம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கண்டி மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
மேலும் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தரவாதத்தை எச்சரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.