Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு

கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு

தலைமன்னார்- ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தலைமன்னார் தலைமையக பொலிஸார் உறுதி செய்துள்ளார்.

கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வீரர் நேற்று காலை பணிக்கு வராததால், அதிகாரிகள் அவரை பார்க்க சென்றுள்ளனர்.

இதன்போது அவர் எழுந்திருக்காததால், அவரை பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles