Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொம் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

ஜெரொம் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள் பெறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து மனுவை மீள் பெற அனுமதி கோரினர்.

அதன்படி, மனுவை மீள் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குறித்த போதகருக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles