Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவர் கொலை: இளைஞர் கைது

பெண்ணொருவர் கொலை: இளைஞர் கைது

கடந்த 17ஆம் திகதி ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுகமவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

85 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சடலத்தில் காயங்கள் இருப்பது அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலைதான் என்பது தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லோலுகமவத்தை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.

சந்தேக நபரை இன்று (20) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles