Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

கிராண்ட்பாஸ்- டிமெல்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 215 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.

அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று (19) மொரட்டுவ – முராவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராவார்.

சந்தேகநபர் இன்று (20) மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles