Thursday, June 12, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்பளம் வழங்க காணியை விற்க தயாராகும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம்

சம்பளம் வழங்க காணியை விற்க தயாராகும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம்

கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் தேசிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆணைய ஊழியர்களுக்கான சம்பளம், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்காக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம், பேலியகொட பகுதியிலுள்ள நிலத்தை விற்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த நிலப்பரப்பை 10 பில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கோரும் ஆவணங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவர் ரத்னசிறி களுபஹன தெரிவித்தார்.

பேலியகொட மீன் சந்தைக்கு அருகிலுள்ள அந்நிலப்பரப்பு 17 ஏக்கருக்கும் அதிகமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles