Monday, June 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமன்னார் தாக்குதல் சம்பவம்: ஒருவர் பலி

மன்னார் தாக்குதல் சம்பவம்: ஒருவர் பலி

மன்னார் நானாட்டான் அச்சங்குளம் பகுதியில் இன்று (17) முற்பகல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இருவர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles