நாட்டின் விவசாய அபிவிருத்திக்காக அடுத்த 05 வருடங்களுக்குள் 3,800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ‘கிரேன் சபிரி ரட்டக்’ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர விவசாய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் கீழ் புனரமைக்கப்படாத கிராமப்புற விவசாய வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.