Saturday, January 31, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலை மாணவன் சடலமாக மீட்பு

பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து நீதிவான் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles