2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு 39 மையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
18 நகரங்களில் உள்ள பாடசாலைகள் விடைத்தாள் மதிப்பீட்டுப் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.
இதற்கிடையில், ஆங்கில வழி மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு அடுத்த கட்டத்தின் கீழ் தொடங்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.