டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதியே பிரதான காரணம் எனவும் எனவே வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானத்தை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடன் முறையின் ஊடாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாடு இன்னும் கடன் நெருக்கடியில் இருப்பதால் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதே மிகப் பெரிய சவாலாக உள்ளது என்றார்.
இவ்வாறான நிலையில், கடன் முறையின் ஊடாக வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அவதானமாக ஆராய வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.