Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறையிலுள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற தாய் கைது

சிறையிலுள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற தாய் கைது

களுத்துறை சிறைச்சாலையில் கைதியாகவுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை – விலேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மகனைப் பார்ப்பதற்காக குறித்த தாய் காற்சட்டையொன்றை எடுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles