Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசப்ரி குறித்த சுங்கத்திடம் அறிக்கை கோரினார் சபாநாயகர்

சப்ரி குறித்த சுங்கத்திடம் அறிக்கை கோரினார் சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சபாநாயகர் வலியுறுத்தினார்.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles