Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்கிரீஸில் படகு கவிழ்ந்து 79 பேர் பலி

கிரீஸில் படகு கவிழ்ந்து 79 பேர் பலி

இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகக் பயங்கரமான இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலையில் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, கிரீசின் கடலோரக் காவல்படை – கடற்படை மற்றும் வணிகக் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் பரந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை 104 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் 400 பேர் வரை இருந்ததாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles