Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

பொரலஸ்கமுவ, பொகுந்தர மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களில் நாளை 20 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கோரக்காபிட்டிய, சித்தாமுல்ல, ஆரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம-பிலியந்தல வீதி, எதிரிசிங்க வீதி, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள அனைத்து இடைப்பாதைகளிலும் 20 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

பலன்வத்தையில் உள்ள நீரேற்று நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles