கொழும்பு செட்டியார் தெருவில் இன்றையதினம் தங்க விற்பனை விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்று அங்கு 24 கறட் தங்கம் ஒரு பவுன் 163,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 149,500 ரூபாவாகவும் அதிகரித்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
டொலர் பெறுமதி மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.