இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 26.2 சதவீத அதிகரிப்பாகும்.
சீன மக்கள் வங்கியினால் 1.4 பில்லியன் டொலர் பரிமாற்றம் வசதியும் இந்த வெளிநாட்டு ஒதுக்கத்தில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.