நாட்டின் பல பாகங்களிலும் தோடம்பழப் பயிர்ச்செய்கை நடைபெற்றாலும் கண்டி, நுவரெலியா மற்றும் பது மாவட்டங்களின் கீழ் பகுதிகளில் மன்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும் கேள்வியுள்ளதாகவும் அவற்றை இறக்குமதி செய்வதற்காக பெருமளவு அந்நிய செலாவணி விரயமாவதாகவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய பயிர்ச்செய்கைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.