ஹெய்ட்டியில் வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெய்ட்டியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழைக் காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்குண்ட 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 13 ஆயிரத்து 300 இற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து நிர்கதி அடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
