கோரமண்டல் கடுகதி ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
