Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இலங்கை வந்தது

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இலங்கை வந்தது

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ‘PNS SHAJAHAN’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலுக்கு இராணுவ மரபுப்படி கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ‘PNS SHAJAHAN’ என்ற போர்க்கப்பலானது 134.1 மீற்றர் நீளம் கொண்டது.

இந்தக் கப்பல் நாளை மறுதினம் (04) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதுடன், மேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles