இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தித் திட்டத்துக்காக கொரிய தொழில்நுட்ப அபிவிருத்தி நிறுவனத்துடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (31) ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
இதற்காக எரிசக்தி அதிகார சபைக்கு 5.2 மில்லியன் டொலர்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரி மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிஇப்பன்ஹார ஏரிக்கு அருகாமையில் கொரிய தொழில்நுட்ப நிறுவனத்தினால் மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் டிசெம்பர் மாதம் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.