லிட்ரோ சமையல் எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளாந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விநியோகத்தை அதிகரிக்க சபுகஸ்கந்த பகுதியில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.