கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து மதுவரி திணைக்கள உரிமம் பெற்ற மதுபானக் கடைகளையும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடுவதற்கு மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார்.
ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல திருவிழா நடைபெறும் பகுதியை தடையற்ற வலயமாக மாற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதுவரி உத்தியோகத்தர்களின் குழுக்கள் எசல திருவிழா மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.