Saturday, September 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்

இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான 30 கிலோமீற்றர் நீளம் கொண்ட பாக்கு நீரினையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் மதுஸிகன் தவேந்திரன் நேற்று 12 மணித்தியாலம் 53 நிமிடம் 43 விநாடியில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடல் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் கடலில் ஏற்படும் பொலித்தீன் மாசுபாடு குறித்தான பொது விழிப்புணர்வை மக்களிடையே இன்றைய இளைஞர் சமூதாயத்திடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாக்கு நீரிணையை நீந்திகடக்கும் முயற்சியை ஜனாதிபதி சாரணர் விருதை பெற்ற மாணவன் மேற்கொண்டார்.

இதனடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கை தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஸ்கோடி நோக்கி படகில் சென்ற அவர் அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணியளவில் நீந்த தொடங்கி தொடர்ச்சியாக 14 மணித்தியாலங்கள் நீந்தி தலைமன்னாiரை நேற்று பிற்பகல் 3.05 வந்தடைந்த இவருக்கு புதிய சோழன் உலக நிறுவனம் சாதனையை அறிவித்து மாணவனுக்கு நினைவு சின்னமும் வழங்கி கௌரவித்தது.

இந் நிகவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மன்னார் அரசாங்க அதிபர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் சாதனை மாணவனின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles