Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயினால் 24 பேர் மரணம்

டெங்கு நோயினால் 24 பேர் மரணம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு நோயினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி வரை 38,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார் .

2017 ஆம் ஆண்டைப் போன்று அதிக டெங்கு தொற்றுநோய்க்கு நாடு செல்வதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாகவும், 38000 டெங்கு நோயாளர்களைக் கொண்ட நாடாக அடுத்த பருவ மழைக்காலத்தை நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் இது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் நிபுணர் கலாநிதி அனோஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles