வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், இன்றைய தினம் அதிக வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில், மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அதிக கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.